Pages

Saturday, December 22, 2012

பிலாக்டு - BLOCKED



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்த பதிவானது ப்ளாக் மற்றும் வெப்சைட் அட்மின்களுக்கு;

Thursday, December 20, 2012

ஃபேஸ்புக் - FACE BOOK




அஸ்ஸலாமு அலைக்கும்.

வழக்கமாக நான் ஒரு பதிவை ஆரம்பம் செய்யும்போது அன்பான சகோதரர்களே என்று ஆரம்பிப்பேன். ஆனால் இந்த பதிவில் சகோதரர்களே மற்றும் சகோதரிகளே என்று ஆரம்பம் செய்ய விரும்புகிறேன்.

இன்று நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளைங்கிகள் மிகப் பெரிய ஒரு விசயத்துக்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்களும் இவ்வாறே அடிமைப்பட்டு இருக்கிறார்கள்.

Friday, December 14, 2012

அல்-குர்ஆன் vs மாயன் காலெண்டர்



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று உலகத்தில் அதிகமான மக்களால் பேசப்படும் ஒரு விசயம் 21-12-2012 இல் உலகம் அழிந்து விடும் என்பதுதான்.உலகத்தை படைத்த இறைவன் ஒரு நாளில் இந்த உலகம் அழிக்கப் படும் என்பதை குரானில் கூறுகிறான். ஆனால் அது எந்த நாளில்(தேதியில்) என்பதை நமக்கு  கூறவில்லை. அந்த நாளையும், நேரத்தையும் படைத்தவனே அறிவான்.

ஆயுதம்: தொடர்ச்சி 4



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்...

ஆயுதம் என்ற தலைப்பில் நாவைப் பேணுவதின் அவசியத்தைப் பற்றி என்று நாம் பார்த்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியை புறம் என்று கோடிட்டு மேலும் காண்போம்.

ஒரு சமூகத்தின், குடும்பத்தின் கட்டுக்கோப்பையும், ஒற்றுமையையும் சிதைத்து பகைமையை ஏற்படுத்தும் ஒரு பண்பற்ற செயலாகவே புறம் இருக்கிறது.

Saturday, December 8, 2012

ஆயுதம்: தொடர்ச்சி 3


அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் .

ஆயுதம் என்ற தலைப்பில் நாவை பேணுவதின் அவசியத்தை பற்றி பார்த்து கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியை இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.

ஒருவனது நாவுதான்  மறுமையின் ஈடேத்திர்க்கும் அல்லது அழிவிற்கும் காரணமாகி விடுகிறது.

Wednesday, December 5, 2012

அவசர தேவை:



அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பான சகோதரர்களே, இன்றைய காலக்கட்டத்தில் ஒற்றுமை என்ற வார்த்தை ஷிர்க்கை விடவும் ஒரு பாவமான வார்த்தையாக ஆகி விட்டது.
முன்பெல்லாம் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மெச்சி பேசினார்கள். காரணம் சகோதரத்துவம் , ஒற்றுமை, மனிதர்களுக்கு மதிப்பளித்து நடப்பது போன்ற பல காரணங்களுக்காக... தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது இஸ்லாத்தில் இணையும் அடுத்த நிமிடமே தீண்டாமை உன்னை விட்டு சென்று விடுகிறது என்றார்.

Friday, November 16, 2012

இறுதி பேருரை...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அன்பார்ந்த சகோதரர்களே.. உலக தலைவர்களில் இதுவரை இப்படி ஒரு உரையை எவரும் நிகழ்த்தியதில்லை, இனி எவரும் நிகழ்த்த போவதில்லை என்று நாம் கூறிக் கொள்ளலாம். அதுதான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய இறுதி பேருரை.

Friday, November 2, 2012

ஆயுதம்: தொடர்ச்சி 2



அஸ்ஸலாமு அலைக்கும்...

அன்பான சகோதரர்களே!.. ஆயுதம் என்ற தலைப்பில் நாவை பேணுவதைப் பற்றி இஸ்லாம் சொல்லக்கூடிய செய்திகளை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில விசயங்களை பற்றி பார்போம், இன்ஷாஅல்லாஹ்.

ஆயுதம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே.. இன்றைய தலைப்பில் நாவை பேணுவதின் அவசியத்தை பற்றி பாப்போம்.

Monday, July 2, 2012

புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

Source From: www.thoothuonline.com


மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன.

Sunday, June 24, 2012

அன்புக்குரிய பெற்றோர்களே!


Source From: www.muthupet.org

கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது.

Monday, June 11, 2012

பயன் தரும் வியாபாரம்:

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே, வியாபாரம் பற்றி அல்லாஹ் நமக்கு என்ன கூறுகிறான் என்று இந்த பதிவில் பாப்போம். இன்று நம் மக்களில் பெரும்பாலானோர் வியாபாரம் செய்து கொண்டு வருவதை அறிவீர்கள். ஆனால், செய்யக்கூடிய வியாபாரம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதை அறிந்து செய்வதுதான் சிறந்தது.

Saturday, June 2, 2012

கிறிஸ்தவ பெண்கள் ஆடை அணிவதில்...


Source from: www.thoothuonline.com

கிறிஸ்தவ பெண்கள் ஆடை அணிவதில் முஸ்லிம் பெண்களை முன்மாதிரியாக பின்பற்றவேண்டும் – காப்டிக் பிஷப்!


கிறிஸ்த பெண்கள் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற அடக்க ஒடுக்க மிக்கவும், எளிமையானதுமான ஆடைகளை அணிய வேண்டும் என எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் கூறியுள்ளார்.
காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார் என பிரிட்டனில் பிரபல பத்திரிகையான கார்டியன் கூறுகிறது.
பரிசுத்தமானவரான கன்னிமேரி(மர்யம்) முடியை முழுமையாக மறைப்பதற்காக முழுமையான ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஏன் நீங்கள் இவ்வாறு அணிவதில்லை என்று கிறிஸ்தவ பெண்களிடம் பிஷப் கேள்வி எழுப்புகிறார்.
எகிப்தில் பெரும்பாலான பெண்கள் தலையை மறைப்பதுடன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றனர். குறைந்த அளவிலான ஆடைகளை அணியும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அண்மையில் அதிகரித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், பிஷப்பின் கருத்துக்கு கிறிஸ்தவ பெண்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.


Thursday, May 31, 2012

சூனியம் (குரானுக்கு முரணானதா?)




அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான சகோதரர்களே, சூனியம் என்றால் என்ன? இஸ்லாம் இதை பற்றி என்ன கூறுகிறது என்று நான் சில அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட செய்திகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். சற்று மார்க்கம் தெரிந்த சகோதரர்களிடமும், சற்று நன்கு மார்க்க விசயம் தெரிந்த சில சகோதரர்களிடமும் நான் இதை பற்றி கேட்டேன். அதிலும் சில முரண்பாடுகள் இருக்கவே செய்தது. சில சகோதரர்கள் இருக்கு என்றார்கள். சிலர் இல்லை என்றார்கள். இன்னும் சிலரோ, நான் சில கேள்விகளை கேட்டதால், இருக்கு.... ஆனா இல்லை.... என்றார்கள். இருக்கு என்பவரும் குர்ஆன் ஹதிஸை ஆதாரமாக வைகிறார்கள். இல்லை என்பவர்களும் குர்ஆன் ஹதிஸை ஆதாரமாக வைகிறார்கள். நீ என்னப்பா சொல்ல வர. இருக்குங்கிரியா? இல்லைங்கிறியா? என்று கூறுகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

Saturday, April 28, 2012

நயவஞ்சகர்களின் துரோகம்:டிசம்பர் 6




அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர்களே, முஸ்லிம்களான நம் அனைவருக்கும் பாபரி மஸ்ஜித் பற்றி தெரியாமல் இருக்காது. சிறுவர்களிடத்தில் கூட டிசம்பர் 6 என்று கூறினால் "நம்மலே வேனில் கூட்டிகிட்டு போய் ஒரு கொடியை கையில் கொடுத்து நிற்க வைத்து கூட்டமாக கத்திவிட்டு வருவோமே" அந்த நாள்தானே என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு நமது சமூதாய இயக்கங்கள் போட்டி போட்டு கொண்டு போராட்டம் செய்து விட்டார்கள். இதனால்தான் இயக்கவாதிகள்: எனது பார்வையில் என்ற தொடரில் எனது அடுத்த தலைப்பாக நீயா? நானா? என்று வைத்து உள்ளேன்.

Thursday, March 29, 2012

காஷ்மீர் அதிர்ச்சியூட்டும் அடக்கத் தலங்கள்!

அஸ்ஸலாமு அழைக்கும்


http://www.samooganeethi.org என்ற இணையதளிருந்து 


காஷ்மீர் என்றாலே கடுங்குளிரையும் தாண்டிய ஏராளமான அதிர்ச்சிகள் உண்டு. சமீபத்தில் ஒரு முறையீடு தேசிய மனித உரிமைக் கழகத்தின் கதவைத் தட்டியது ராதாகாந்த திரிபாதி என்பவர் தான் இந்த அதிர்ச்சி கலந்த முறையீட்டை மனித உரிமை அமைப்பிடம் முன்வைத்தவர்.

Wednesday, March 28, 2012

கஸ்மியின் கைது எழுப்பும் கேள்விகள்?


அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே,
www.thoothuonline.com என்ற இணையத்தளத்தில் இருந்து.....
டெல்லி இஸ்ரேல் தூதரக வாகன குண்டுவெடிப்பு வழக்கில் தலைநகரில் பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Friday, March 23, 2012

பகிரங்க அழைப்பு:

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பான சகோதரர்களே!, படைத்தவனை விட்டுவிட்டு படைப்புகளை வணங்கும் எனது நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இந்த அழைப்பு. படைப்பாளன் என்று ஒருவன் இல்லாமல் படைப்பு என்பது இல்லை என்பதை இறை மறுப்பாளர்கள் கூட நம்புகின்றனர். இதன் மூலம், இந்த உலகமும் அதில் இருப்பதும் படைப்பு; அதை படைத்தவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலகை படைத்து அதில் நம்மை வாழ வைத்த இறைவனுக்கு அதிகம் அதிகம் நன்றி செலுத்த கடமை பட்டுள்ளோம். படைப்பாளன் எதிர் பார்ப்பதும் அதைத்தான். 

Saturday, March 17, 2012

என்ன படிக்கலாம்

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பான சகோதரர்களே! நமது வாழ்வில் பலதரப்பட்ட செய்திகளை, விசயங்களை படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். பள்ளி பருவத்தில் பள்ளி பாடங்களை படித்து மனதில் நிறுத்தியும்(!), கல்லூரி பருவத்தில் கல்லூரி பாடங்களை படித்து அதன் மூலம் நல்ல வேளையில் அமர்ந்தும், அதன் மூலம் பல அனுபவங்களை கற்று முன்னேறியும் வருகிறோம்; வந்தும் இருகிறார்கள்.