வீட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு அன்பு மற்றும்
பாசத்துடன் சேர்த்து உணவு மட்டுமே கிடைக்கும். வாழ்க்கையின் அனுபவம் என்பது
அவனுக்கு வெளியில் இருந்தே கிடைக்கிறது. அந்த அனுபவம் தான் அவனுக்கு பாடமாகிறது.
அதுவே அவன் வாழ்க்கை ஆகிறது.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் இருக்க வேண்டும். அதற்காக அவரவரின் குடும்பம், சினிமா போன்ற விசயங்களில் இருக்க கூடாது. அவைகள் அனைத்தும் மாணவர்களுடைய எதிர்காலத்தின் நலனாக இருக்க வேண்டும்.
ஒரு பள்ளி கூடமோ அல்லது கல்லூரியோ இருப்பின் ஆசிரியர்களின் பணி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆசிரியர்களின் பங்கானது மாணர்வர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் உள்ளது.