அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாத்தின் பாதையில் குழந்தைகளை வளர்ப்பது என்பது அழகான செயல். அதை நடைமுறையில் செயல்படுத்துபவர்களுக்கே தெரியும். ஒவ்வொரு குழந்தைகளும் இஸ்லாத்தின் அடிப்படையை அறிந்து வளர்வதே சிறப்பு.
லா இலாஹா இல்லால்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று அடிக்கடி கூறி நமது ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் நாம், அதனை நமது குழந்தைகள் முன்பாக அதிகமாக கூற வேண்டும்.