அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று இருக்கும் போது, நாம் மனதில் நினைக்கும் நன்மை, தீமைகளை மலக்குமார்கள் எவ்வாறு கண்டுபிடித்து எழுதுகிறார்கள் என்ற ஒரு கேள்வி வந்தது. இது அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருப்பதாக நினைத்து, எவேரேனும் நல்லடியார்களுக்கும் இது போல சக்தி இருப்பதாக நினைக்க வைத்து விடுகிறது என்பதை கேள்வியின் மூலம் உணர முடிகிறது.